arvind kejriwal said that My life is dedicated to the country. [Credit: PTI Photo]
Arvind Kejriwal: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டங்களை தெரிவித்தனர்.
அதுமட்டுமில்லாமல், பாஜகவுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் குவித்துள்ளனர். இன்று நாடு தழுவிய போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இதனால், கெஜ்ரிவால் வீட்டை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள உள்ள நிலையில் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், இன்று காலை டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனைத்தொடர்ந்து, டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை 10 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் அனுமதி கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தில் ஆஜராகும்போது மீடியாக்களை பார்த்து அரவிந்த் கெஜ்ரிவால் சில வார்த்தைகளை கூறினார். அவர் கூறியதாவது, சிறைக்குள் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, எனது வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அதாவது, அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபோன்று, நான் சொல்ல வேண்டியதை நீதிமன்றத்தில் சொல்லிவிட்டேன் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் கூறினார்.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…