Categories: இந்தியா

EDயின் குற்றசாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை.. சுப்ரீம் கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் மனு!

Published by
பாலா கலியமூர்த்தி

Arvind Kejriwal: அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை விசாரணைக்கு பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்திருந்த நிலையில், இதுதொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, அமலாத்துறையும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதில் மனுவும் தாக்கல் செய்திருந்தது. அதில், கெஜ்ரிவால் குறித்த பல்வேறு தகவல் வெளியாகி இருந்தது.

அதாவது, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கியுள்ளதாகவும், லஞ்சம் அளித்தவருக்கு சாதகமாக மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் மதுபான முறைகேடு நடந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் 170 செல்போன்கள் பயன்படுத்தியதாகவும், பின்னர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 36 பேர் சேர்ந்து அதனை அளித்ததாகவும், கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த காரணத்தால் அவரை கைது செய்துள்ளோம் எனவும் அமலாக்கத்துறை கூறி இருந்தது.

இந்த நிலையில் அமலாக்கத்துறை மனுவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்தி என்னை கைது செய்துள்ளது. அமலாக்கத்துறை குற்றசாட்டுகள் அனைத்தும் போலியானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாதவை. அரசியல் எதிரிகளை பழிவாகுவதற்காக அமலாத்துறையை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தல் நேரத்தில் என்னை கைது செய்து ஆம் ஆத்மீ கட்சியை அழிக்க முயற்சித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒரு ரூபாய் கூட பெறவில்லை. இந்த கைது என்பது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இதனால் தன்னை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…

5 minutes ago

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

28 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

57 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago