அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லி முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது, தற்போது வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடந்த மார்ச்-21 ம் தேதி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது டெல்லி சிறப்பு நீதிமன்றம்.
இன்றைய நாளில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியேறுவதாக இருந்த நிலையில் தற்போது அவரது ஜாமீனை நிறுத்தி வைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நேற்று விசாரணை நீதிமன்றம் அளித்த ஜாமீன் உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை 48 மணி நேரம் அவகாசம் கேட்டிருந்தனர் அதனை நீதிபதி மறுத்து, ஜாமீன் வழங்க உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதை தொடர்ந்து அமலாக்கத்துறை அதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு அளித்த ஜாமீனை நிறுத்தி வைப்பதாக தற்போது உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அமைப்பினர் சார்பில் இன்று உளுந்தூர்பேட்டையில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு…
லெபனான் : நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு, ஈரானிலிருந்து சுமார் 1400 கி.மீ தொலைவிலிருந்து இஸ்ரேலின் 180 இடங்களை குறிவைத்து பாலிஸ்டிக்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. நிகழ்ச்சி…
சென்னை : நடிகர் விஜய்யின் கடைசி படமான 'தளபதி 69' படத்தை இயக்குநர் H.வினோத் இயக்குகிறார். இப்படத்தின் அப்டேட்களை KVN…
சென்னை : இன்று காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னையில் காந்தி சிலைக்கு அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் மரியாதை செலுத்தினார்.…
சென்னை- நவராத்திரி பூஜைக்கு முதல் நாள் நெய்வேத்தியமான வெண்பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…