Aravind Kejriwal [file image]
அரவிந்த் கெஜ்ரிவால்: டெல்லியில் மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதலைமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜூன் 20-ம் தேதி சிறப்பு நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது. சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நிதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
அதன் அடிப்படையில், டெல்லி உயர் நீதிமன்றம் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு விசாரணை மேற்கொண்டது. அப்போது விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமினுக்கு முதலில் இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.
மேலும், அப்போது இந்த ஜாமீன் தொடர்பான வழக்கு ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால் தற்போது உச்சநீதிமன்றம் இதில் தலையிட தேவையில்லை என்று கூறியதுடன் வழக்கையும் வரும் ஜூன் 26-ம் தேதிக்கு (புதன்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இன்றைய நாளில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கதிர் குமார் ஜெயின் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜாமீனுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…
பர்ஹைட் : ஜார்க்கண்டின் சாஹேப்கஞ்ச் மாவட்டத்தின் பர்ஹைட் என்கிற பகுதியில் 2 சரக்கு ரயில்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் 2…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த மார்ச் 28ம் தேதி சென்னை திருவான்மியூர்ராமச்சந்திரா…