Kejriwal - Mamata [File Image]
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, நாளை கொல்கத்தாவில் மாலை 3 மணிக்கு மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளதாக கெஜ்ரிவால் நேற்று தகவல் தெரிவித்தார். இந்த சந்திப்பில் டெல்லி அரசுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக கெஜ்ரிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றையும் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று கெஜ்ரிவாலை சந்தித்த நிதிஷ் குமார் இதுகுறித்து பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், அவர் 24ம் தேதி மும்பையில் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், சிவசேனா (யுபிடி) தலைவருமான உத்தவ் தாக்கரேவையும், மே 25 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவாரையும் சந்திக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…