Categories: இந்தியா

கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம்? 170 செல்போன்கள்… உச்சநீதிமன்றத்தில் ED பகிர் தகவல்!

Published by
பாலா கலியமூர்த்தி

Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு.

டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து கடந்தாண்டு டெல்லி முன்னாள் துணை முதல் மணீஷ் சிசோடியவை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

இதையடுத்து அந்த வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த சூழலில் கடந்த மாதம் 21ம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் ஒரு வார காலம் காவலில் எடுத்து கெஜ்ரிவாலிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்பின் நீதிமன்ற காவலில் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, அமலாக்கத்துறை கைதை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் கெஜ்ரிவாலின் மனுவை நிராகரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அமலாக்கத்துறையும் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது. அதில் சில பரபரப்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை பதிவில் மனுவில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

லஞ்சம் அளித்தவருக்கு ரூ.192 கோடி கிடைக்கும் வகையில் மதுபான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. லஞ்சம் அளித்தவருக்கு சாதகமாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த காரணத்தால் அவரை கைது செய்துள்ளோம். இதனால் அவருக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்ட முடியாது.

மேலும், மதுபான முறைகேடு நடந்தபோது அரவிந்த் கெஜ்ரிவால் 170 செல்போன்கள் பயன்படுத்தியதாகவும், பின்னர் கெஜ்ரிவால் உள்ளிட்ட 36 பேர் சேர்ந்து அதனை அளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது செல்போனின் password கேட்டபோது கூட கெஜ்ரிவால் அதனை தர மறுக்கிறார் என பல்வேறு பகிர் தகவல்கள் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

14 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

14 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

14 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

14 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

15 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

15 hours ago