Delhi CM Arvind Kejriwal [File Image]
Arvind Kejriwal : டெல்லி சிறையில் இருந்து கொண்டே மாநில முதல்வராக தனது பணியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த வாரம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர் தற்போது வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.
அமலாக்கதுறை விசாரணையில் இருந்தாலும் முதல்வராக தனது பதவியை தொடர்ந்து செய்து வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். தற்போது வரை டெல்லி மாநில அரசுக்கு தேவையான உத்தரவுகளை அவர் வழங்கி வருகிறார். முன்னதாக மார்ச் 23ஆம் தேதியன்று தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.
டெல்லி குடிநீர் மற்றும் கழிவுநீர் தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதன்முறையாக சிறையில் இருந்து உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, தற்போது டெல்லி மருத்துவமனையில் மாநில அரசு சார்பில் வழங்கப்படும் இலவச மருந்துகள் உரிய அளவில் கிடைப்பதில்லை என்றும், அந்த குறைகளை சரி செய்யுமாறும் சுகாதாரத்துறை அமைச்சர் பரத்வாஜூக்கு உத்தரவை கெஜ்ரிவால் பிறப்பித்துள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் , டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்த போதிலும் அவர் டெல்லி மக்களின் உடல்நலம் குறித்து கவலைப்படுகிறார் என கூறினார். இதுபோக நீர்வளத்துறை குறித்த உத்தரவை மீண்டும் கெஜ்ரிவால் சிறையில் இருந்தபடி பிறப்பித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…