Arvind Kejriwal was judicial custody [file image]
Arvind Kejriwal: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே சர்க்கரை நோய் இருக்கும் நிலையில், சிறையில் அவரது சர்க்கரை அளவு 320ஆக அதிகரித்து விட்டதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதையடுத்து அவருக்கு சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இரண்டு புள்ளி குறைந்த அளவு இன்சுலின் ஊசி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
எய்ம்ஸ் மருத்துவரின் பரிந்துரையின் பேரில், திகார் மருத்துவப் பயிற்சியாளரால் அவருக்கு டோஸ் கொடுக்கப்பட்டது என்றும், அதைத் தொடர்ந்து முதலமைச்சரின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 20-ம் தேதி எய்ம்ஸ் நிபுணர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசுகையில், ‘சர்க்கரை அளவு ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால் அவருக்கு இன்சுலின் கொடுக்கலாம்’ என்று திகார் சிறை மருத்துவர்களுக்கு அறிவுறுத்தியதாக சொல்லப்படுகிறது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…