கொரோனா பரிசோதனையை 2 மடங்காக உயர்த்தியதால் பாதிப்பு அதிகமாக கண்டறிய முடிகிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வரும் 7-ஆம் தேதி முதல் மெட்ரோ ரெயில் சேவைக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தொற்று பாதிப்பு அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் பரிசோதனைகள் இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டு வருகிரது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், ஒவ்வொரு நாளும் அதிகமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதால் தொற்று பாதிப்பை அதிகம் கண்டறிய முடிகிறது. இதன் மூலம் தொடர்புகளை கண்டறிய முடியும். எவ்வளவு அதிகமாக பரிசோதனை செய்யப்படுகிறதோ அந்தளவு அதிகமாக பாதிப்பை கண்டறிய முடியும். இந்த வழியில் நாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…