Arvind Kejriwal [File Image]
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. பின்னர் அந்த மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. அதில் அரசுக்கு சுமார் 2,800 கோடி ரூபாய் வரையில் இழப்பீடு ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தனர். பின்னர், இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பாட்டு விசாரணை தீவிரமடைந்தது.
இந்த வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறையினர் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில், முதன்முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயரும், ஆம் ஆத்மி கட்சி பெயரும் இடம்பெற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…