இருந்த ஒருவரும் குணம்..அருணாச்சல பிரதேசம் கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது.!

Published by
பாலா கலியமூர்த்தி

இந்தியாவில் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவு காரணமாகி உலக நாடுகள் கொரோனாவை எதிர்த்து போர் தொடுத்து வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த கொண்டே இருக்கிறது. இதனால் பொருளாதாரத்தில் பல நாடுகள் சரிவை கண்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 21,83,942 பேர் பாதிக்கப்பட்டு, 1,46,873 உயிரிழந்துள்ளார்கள். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5,52,822 பேர் குணமடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. தினந்தோறும் பாதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் 13,387 பேர் பாதிக்கப்பட்டு, 437 பேர் பலியாகியுள்ளார்கள். 1,749 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 3,205 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, 194 பேரை கொன்றுள்ளது. இதனிடையே அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு முதலில் கண்டறியப்பட்ட பூர்ண குணமடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பேமா காண்டு அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் அருணாச்சல பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்! 

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

21 minutes ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

1 hour ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

2 hours ago

“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!

சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…

2 hours ago

நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…

2 hours ago

அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…

3 hours ago