சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசிய அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராகவும்,ஆதரவாகவும் ட்விட்டரில் ஹேஷ் டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் என்னுமிடத்தில் இரண்டு சாமியார்கள் உட்பட 3 பேர் மீது திருடர்கள் என்று நினைத்து நடத்திய தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்து விட்டனர்.இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
இதன் பின்னர் தான் ரிபப்ளிக் சேனலில் இது தொடர்பான விவாதம் ஓன்று நடைபெற்றது.இந்த விவாதம் சர்ச்சைக்கு பெயர்பெற்ற அர்னாப் கோஸ்வாமி தலைமையில் நடைபெற்றது.அப்பொழுது அர்னாப் பேசுகையில்,இந்த விவகாரத்தில் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அமைதியாக இருப்பதாகவும்,அதுவும் இந்துக்களுக்கு நடைபெற்ற சம்பவம் என்பதால் அமைதியாக இருப்பதாகவும்,கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் அமைதியாக இருந்திருப்பாரா என்று கேள்வி எழுப்பினார்.மேலும் இத்தாலியின் அன்டோனியா மைனோ (சோனியா காந்தி) அப்போது அமைதியாக இருந்திருப்பாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.இவர் கூறியதுதான் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.மேலும் இவர் மீது இந்தியாவில் பல இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் சமூக வலைத்தளமான ட்விட்டரில் அர்னாபிற்கு ஆதரவாக #ISupportArnabGoswami , #WeSupportArnab என்ற இரு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றது.மேலும் அவருக்கு எதிராக #ArrestAntiIndiaArnab என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…