தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு 4 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்வை நாயக் என்ற கட்டிட வடிவமைப்பாளர், கடந்த 2018 ஆம் ஆண்டு தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மும்பை போலீசார், அர்னாப் கோஸ்வாமியின் வீட்டில் நுழைந்து, அவரை இழுத்துக்கொண்டு போலீஸ் வேனில் ஏற்றியது, பெரியளவில் சர்ச்சையானது. அவர் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து அர்னாப் கோஸ்வாமி, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அதனை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகக் கோரி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து மும்பை உயர் நீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி மனுதாக்கல் செய்தார். அவரின் ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றமும் மறுத்து, விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியது.
இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அர்னாப் கோஸ்வாமி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு, அர்னாப் கோஸ்வாமி மற்றும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் இருவருக்கும் ஜாமீன் வழங்கியது. தற்பொழுது இந்த இடைக்கால ஜாமீனை 4 வாரங்களுக்கு நீட்டித்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…