லடாக் எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலி வாயிலாக அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய மோடி, நாட்டின் ஒரு அங்குலம் நிலத்தின் மீது கூட யாரும் கண் வைக்க முடியாத வகையில் நமது பலம் உள்ளது. இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை. நாட்டை பாதுகாப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க ராணுவம் தயார் நிலையில் உள்ளது என கூறினார்.
மேலும், ராணுவ வீரர்கள் மீது மகத்தான நம்பிக்கை உள்ளது. மொத்த நாடும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும். ஒரே சமயத்தில் பல முனைக்களுக்கு செல்லக் கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது. நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் நமது ஆயுதப்படைகள் மேற்கொள்ளும். எல்லைப் பகுதியில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகளால் ரோந்து திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முப்படைக்கு தேவையான போர் விமானங்கள், நவீன ஹெலிகாப்டர்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை வாங்கப்பட்டுள்ளன என்று அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
சென்னை : ‘மாநகரம்’, ‘வில் அம்பு’, ‘வழக்கு எண் 18/9’, மற்றும் சமீபத்தில் வெளியான ‘இறுகப்பற்று’ போன்ற படங்களில் தனது…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உள்ளாட்சி பிரதிநிதித்துவத்திற்காக முக்கிய சட்டத் திருத்த மசோதவை கொண்டு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
சென்னை : வரும் மே 11ஆம் தேதியன்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற உள்ளது. கருத்து…
பெங்களூர் : ஐபிஎல் தொடரில் ஒரு முறை கோப்பை வெல்லவில்லை என்றாலும் கூட ஆர்சிபிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லியே…
சென்னை : வேலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிமுக -பாஜக…