370வது சட்ட பிரிவு நீக்கம் ஒரு வரலாற்று சிறப்பு.. இதனால், அந்த நாட்டின் பினாமி போர் முடிவுக்கு வந்துள்ளது.. இந்திய இராணுவ தளபதி அதிரடி கருத்து…

Published by
Kaliraj
  • இன்று இந்திய ராணுவ தினத்தையொட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
  • பின்னர் அவர்  அனைவரையும் விழிப்படைய செய்யும் விதமாக .ஆற்றிய  இராணுவ தின உரை.
   அதில் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரில்  370 வது  சட்ட பிரிவை ரத்து செய்வதற்கானமத்திய அரசின்  முடிவு, ஒரு ‘வரலாற்று  சிறப்புமிக்க நடவடிக்கை’ இது நமது ‘மேற்கு அண்டை நாடுகளின்’ பினாமி போரை சீர்குலைத்து அவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு பல வழிகள் உள்ளன, அந்த வளங்களை  பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம்.  இந்திய இராணுவம் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, உலகளாவிய முன்னேற்றங்களையும் தொடர்ந்து  கண்காணித்து வருகிறது.இந்திய இராணுவம்,  ‘தொழில்நுட்ப நீதியாகவும் ‘ மற்றும் ‘சுதேசிமயம்’ தொடர்பாகவும்  இந்திய ராணுவம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது  எங்கள் அடிப்படை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தவும், இந்திய இராணுவத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படவும்  எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். என்று  கூறினார். இதற்க்கு முன்னதாக  இந்தியா கேட்டில் பகுதியில் உள்ள  ‘அமர்ஜவான்’ ஜோதி போர் நினைவுச் சின்னத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படைத் தளபதி கராம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்திய இராணுவ தளபதியின் இந்த பேச்சு இந்திய மக்க்ளிடையும், இராணுவ வீரர்களிடையேயும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர்.
Published by
Kaliraj

Recent Posts

“இன்னும் நாங்கள் கணவன் மனைவி தான்”- ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு உருக்கமான பதிவு.!

சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…

12 hours ago

வெப்பம், குளிர், மழை… அடுத்த 6 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?

சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…

14 hours ago

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

15 hours ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

16 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

18 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

18 hours ago