370வது சட்ட பிரிவு நீக்கம் ஒரு வரலாற்று சிறப்பு.. இதனால், அந்த நாட்டின் பினாமி போர் முடிவுக்கு வந்துள்ளது.. இந்திய இராணுவ தளபதி அதிரடி கருத்து…

Published by
Kaliraj
  • இன்று இந்திய ராணுவ தினத்தையொட்டி வீர தீர செயல்களை புரிந்த வீரர்களுக்கு ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பதக்கங்களை அணிவித்து பாராட்டினார்.
  • பின்னர் அவர்  அனைவரையும் விழிப்படைய செய்யும் விதமாக .ஆற்றிய  இராணுவ தின உரை.
   அதில் கூறியதாவது, ஜம்மு-காஷ்மீரில்  370 வது  சட்ட பிரிவை ரத்து செய்வதற்கானமத்திய அரசின்  முடிவு, ஒரு ‘வரலாற்று  சிறப்புமிக்க நடவடிக்கை’ இது நமது ‘மேற்கு அண்டை நாடுகளின்’ பினாமி போரை சீர்குலைத்து அவர்களின் எண்ணத்தை தவிடுபொடியாக்கியுள்ளது.. பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்களை எதிர்ப்பதற்கு எங்களுக்கு பல வழிகள் உள்ளன, அந்த வளங்களை  பயன்படுத்த நாங்கள் தயங்க மாட்டோம்.  இந்திய இராணுவம் எப்போதும் விழிப்புடன் இருப்பதோடு, உலகளாவிய முன்னேற்றங்களையும் தொடர்ந்து  கண்காணித்து வருகிறது.இந்திய இராணுவம்,  ‘தொழில்நுட்ப நீதியாகவும் ‘ மற்றும் ‘சுதேசிமயம்’ தொடர்பாகவும்  இந்திய ராணுவம் விரைவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது  எங்கள் அடிப்படை மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்தவும், இந்திய இராணுவத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படவும்  எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். என்று  கூறினார். இதற்க்கு முன்னதாக  இந்தியா கேட்டில் பகுதியில் உள்ள  ‘அமர்ஜவான்’ ஜோதி போர் நினைவுச் சின்னத்தில், முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத், ராணுவ தளபதி எம்.எம்.நரவானே, விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதாரியா, கடற்படைத் தளபதி கராம்பீர் சிங் ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இந்திய இராணுவ தளபதியின் இந்த பேச்சு இந்திய மக்க்ளிடையும், இராணுவ வீரர்களிடையேயும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர்.
Published by
Kaliraj

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

50 minutes ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

1 hour ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

3 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

3 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

4 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

4 hours ago