ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் அரசுத் துறையினரால் சென்றடைய முடியாத இடங்களில் பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ராணுவம் வழங்குவதாக தெரிவித்துள்ளார். நாட்டைக் கட்டமைப்பதில் முப்படைகளின் பங்களிப்பு என்னும் தலைப்பில் டெல்லியில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அரசுத் துறையினரால் சென்றடைய முடியாத பகுதிகளில் வாழும் மக்களுக்குக் கல்வி கற்பிப்பது, மருத்துவம் செய்வது ஆகிய பணிகளை ராணுவத்தினர் செய்து நாட்டின் கட்டமைப்புக்குப் பங்காற்றுவதாகத் தெரிவித்தார்.
ராணுவத்தினர் எங்குச் செல்கிறார்களோ அங்குத் தங்களின் தேவைக்காக உள்ளூர் மக்களின் விளைபொருட்களை அவர்கள் பணங்கொடுத்துக் கொள்முதல் செய்து பொருளாதாரத்துக்குப் பங்களிப்பதாகவும் தெரிவித்தார்.
ராணுவத்தினருக்கு மாத ஊதியம் வழங்கும்போது மூலத்திலேயே வரிப்பிடித்தம் செய்வதன்மூலம் அரசின் கருவூலத்துக்குப் பங்களிப்பைச் செலுத்துவதாகவும் பிபின் ராவத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…