இந்தோ-பாக் எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தல்..!

Default Image

குர்தாஸ்பூர் மாவட்டத்தில் இந்தோ-பாக் எல்லையில் ட்ரோன்மூலம் ஆயுதம் கடத்தல் குறித்து தகவல் கிடைத்த உடனேயே பஞ்சாப் காவல்துறை தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது, குர்தாஸ்பூரில் இரவு 11:30 மணியளவில் ஒரு பாக்கிஸ்தான் ட்ரோன் இந்திய எல்லைக்குள் நுழைவதைக் கவனித்தனர். பின்னர், காவல்துறை மற்றும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் பாகிஸ்தான் ட்ரோன் மீது தாக்குதல் நடத்தினர்.

ட்ரோனில் இருந்து 11 கைக்குண்டுகளை போலீசார் மீட்டனர் என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையிலிருந்து 1 கி.மீ தூரத்தில் ட்ரோனில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அனைத்து கையெறி குண்டுகளும் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கையெறி குண்டு விவகாரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர், நேற்று காலை இப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 84 கையெறி குண்டுகள் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பெட்டியை பஞ்சாப் போலீஸ் கைப்பற்றினர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்