நிர்பயா வழக்கு:ஒட்டைகளை ஒன்றினைத்து குற்றவாளிகள் தப்பிக்க பார்த்ததை-நாடே பார்த்தது..!கெஜ்ரி ஆவேசம்

Published by
kavitha

சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றச் சம்பவம் நடைபெற்று 7 வருடங்கள் கழிந்த நிலையில்  குற்றவாளிகள் 4 பேருக்கும்  இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தூக்கு மேடைக்கு செல்லும் சில நிமிடத்திற்கு முன்பு வரை கூட சட்ட போராட்டங்களை  குற்றவாளிகள் மேற்கொண்டனர்.  குற்றவாளிகளுள் ஒருவரான பவன் குப்தா சார்பில் இந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து உச்சநீதிமன்றத்தில் நேற்று இரவே மேல்முறையீடு செய்யப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை இன்று அதிகாலை 2.45 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில்  நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷன், போபண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் “ஏபி சிங் “ஆஜராகி தனது தரப்பு வாதங்களை முன்வைத்தார்.ஒரே வாதத்தையே அனைத்து நீதிமன்றத்திலும் வைத்த ஏபி சிங்-கின் இந்த வாதத்தினை எதையும் நீதிபதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.கூறியதையே திரும்ப திரும்ப கூறாமல் புதியதாக எதையாவது கூறுங்கள் என்று நீதிபகள் கோவத்தோடு கேட்ட நிலையில் குற்றவாளிகள் 4 பேருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டு விட்டது. மேலும் வழக்கு மிகச்சரியாக நடந்து இருக்கிறது. முறையான பாதையில்  வழக்கு சென்று உள்ளது. கருணை மனு அளிக்க 4 வருடங்கள் வரை நேரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆகவே அவர்களுக்கு எதிரான தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்ட குறித்தப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு நிறைவேற்றப்பட்டது.

20 நிமிடங்கள் தூக்கில் தொங்கியபடியே இருப்பார்கள் என்று சிறைத்துறை தகவல் தெரிவித்தது.இந்நிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது  குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில் நிர்பயா வழக்கின் மூலம் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி நிர்பயா குற்றவாளிகள் தப்பிக்க நினைத்ததை நாட்டு மக்கள் அனைவரும் பார்த்தோம் என்று கெஜ்ரிவால் கடுமையான விமர்சனத்தையும் தெரிவித்தார்.

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

9 hours ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

10 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

11 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

12 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

12 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

13 hours ago