எவ்வித தட்டுப்பாடும் வராது உறுதி அளிக்கிறேன்-பீதியடைய வேண்டாம்!டெல்லி -முதல்வர்.,வேண்டுகோள்

Published by
kavitha

கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பறிபோகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். இந்நிலையில் தலைநகர் டெல்லியில்  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லி ஆளுனருடன் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கவர்னர் அனில் பைஜால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது முதல்வர் கெஜ்ரிவால் பேசியதாவது, ‘பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. நேற்று (மார்ச்24) பிரதமர் மோடி பேசியதற்கு பின் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகளுக்கு முன் குவிந்தனர். அத்தியாவசிய பொருட்களுக்கு எந்தவித ஒரு தட்டுபாடும் வராது என்று உறுதியளிக்கிறேன். ஆகையால் ஊரடங்கு உத்தரவால் எந்த பொருட்களும் கிடைக்காது என மக்கள் பீதியடைய வேண்டாம் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும். இதனை பற்றி தெரிந்துகொள்ள போலீஸ் கமிஷனர் 23469536 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் உடன் தெரிவித்தார்.

Recent Posts

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும்  ராவல்பிண்டி கிரிக்கெட்…

2 hours ago

இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…

4 hours ago

என்னை பத்தி ஏன் பேசுறீங்க? அன்புமணி பேச்சால் கடுப்பான மயிலாடுதுறை எம்.பி. சுதா!

சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…

4 hours ago

ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!

டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது  பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…

5 hours ago

NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..

ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…

6 hours ago

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…

6 hours ago