கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் “இ-சந்தையில்” கொள்முதல் செய்ய ஒப்புதல்!

Published by
பாலா கலியமூர்த்தி

இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும் என அமைச்சர் தகவல்.

கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், இ-சந்தை கொள்முதல் திட்டம் மூலம் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்கள் வெளிப்படையாக உரிய விலையில் விற்கப்படும். GeM (Government e-Marketplace) போர்ட்டலை அறிமுகம் செய்த பிறகு, சுய உதவிக் குழுக்கள், MSME-கள் மற்றும் சிறு வணிகர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர்.

பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசாங்கத்தின் உள்ளாட்சி அமைப்புகள் ஜிஇஎம் போர்ட்டலில் இருந்து வாங்கத் தொடங்கின. கைவினை கலைஞர்கள், நெசவாளர்கள், சுய உதவிக் குழுக்கள், தொடக்க நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர் & MSME-கள் GeM-இல் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கான கணக்குப்படி பார்த்தால், 2017-18ல் ரூ.6220 கோடி கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், 2021-22ல் ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ஐந்தாண்டுகளில் இந்த அதிகரிப்பு என்பது பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படை தன்மையை குறிக்கிறது. ஏழைகள், பெண்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் பெறும் நலனை குறிக்கிறது. மேலும் பிரதமர் மோடியின் தொழில்நுட்பம் தொடர்பான நடவடிக்கைகளால் கூட்டுறவு நிறுவனங்களும் தற்போது பயனடையும் என்றும் கூட்டுறவு அமைப்புகளின் பொருட்களை மத்திய அரசின் இ-சந்தையில் கொள்முதல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் கூறினார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

2 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

4 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

4 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

4 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

4 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

5 hours ago