டெல்லி வன்முறையில் செங்கோட்டையில் உள்ள பழமை வாய்ந்த பொருட்கள் சேதம்…!

Published by
லீனா

டெல்லியில் டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பல பொருட்கள் சேதமடைந்துள்ளது.

தலைநகர் டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் பலரும் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குடியரசு தினமான 26-ஆம் தேதி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். டெல்லியில்  டிராக்டர் பேரணியின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்நிலையில் கோட்டைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பல்வேறு பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளதாக கலாச்சார அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இரண்டு வரலாற்றுப் பித்தளை அடுப்புகள் காணாமல் போயுள்ளது.

கோட்டையின் பிரதான வாயிலில் சேதமடைந்துள்ளது. இந்த கலைப் பொருட்கள் விலை மதிப்பற்றவை. அவற்றை மாற்ற முடியாது என்றும், நினைவுச்சின்னத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் விரிவான சேதத்தை ஏற்படுத்தியதாகவும், டிக்கெட் கவுண்டர் அழிக்கப்பட்டன, ஜன்னல் பலகைகள் சிதைக்கப்பட்டன, கழிப்பறைகள் உடைக்கப்பட்டன, ஏர் கண்டிஷனர்கள் சேதமடைந்தன, கல் பலகைகள் பிடுங்கப்பட்டன, ஊழியர்கள் அறைகள் அழிக்கப்பட்டன, ரெயில்கள் மற்றும் படிக்கட்டுகள் பழுதடைந்தன, ஒரு போலீஸ் வேன் அடித்து நொறுக்கப்பட்டன, கோட்டைக்குள் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்தன என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சேதங்களை மீட்டெடுக்க பல மாதங்கள் ஆகும். இதுகுறித்து காவல்துறைக்கு ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago