இந்தியா

மணிப்பூரில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்…! பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த தலைமை காவலர் கைது…!

Published by
லீனா

தலைமை காவலர் ஒருவர் மளிகை கடைக்குள் நுழைந்து ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மணிப்பூர் மாநிலம், இம்பாலில் மளிகை கடைக்குள் நுழைந்த எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் ஒருவர் அங்கிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த பெண்ணை அவர் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, தற்போது அவர் எல்லை பாதுகாப்பு படையால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் குற்றம் சாட்டப்பட்ட தலைமை காவலர் சதீஷ் பிரசாத் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் தௌபல் மாவட்டத்தில் இரண்டு பெண்களை நிர்வாணமாக அழைத்துக் கொண்டு, அணிவகுத்துச் செல்லும் வீடியோ வைரலானது. இது நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய நிலையில், மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பத்மபூஷன் விருது வாங்கிய அஜித்…வாழ்த்து தெரிவித்த இபிஎஸ், நயினார் நாகேந்திரன்!

சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

4 minutes ago

RRvsGT : பந்துவீச்சை தேர்வு செய்த ராஜஸ்தான்! அதிரடி காட்டுமா குஜராத்?

ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…

1 hour ago

பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!

டெல்லி : ஆண்டுதோறும்  எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…

1 hour ago

மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!

சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…

2 hours ago

“கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க” உக்ரைனுக்கு எச்சரிக்கை விட்ட ரஷ்யா!

ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…

2 hours ago

படத்துக்காக மட்டும் தான் சிகரெட்…ரசிகர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த சூர்யா!

ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…

3 hours ago