குடியரசு தின டிராக்டர் பேரணியின் போது செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பாக மற்றொரு நபரை டெல்லி காவல்துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
ஜனவரி 26 வன்முறையின் போது செங்கோட்டையில் வாள் சுற்றியதாக மனிந்தர் சிங்கை டெல்லி காவல்துறையினர் கைது செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு 29 வயதான ஜஸ்பிரீத் சிங் என்ற நபர் (திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜஸ்பிரீத் சிங் மற்றும் மனிந்தர் சிங் இருவரும் டெல்லியின் ஸ்வரூப் நகரில் வசிப்பவர்கள். மனிந்தர் சிங் ஸ்வரூப் நகரில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் வாள் பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார், மேலும் கார் ஏசி மெக்கானிக்காக பணிபுரிகிறார்.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில் , ஜனவரி 26 வன்முறையின் போது ஜஸ்பிரீத் சிங் செங்கோட்டையின் மீது ஏறி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் செங்கோட்டையில் சேதத்தை ஏற்படுத்துவது போல் இருக்கிறது என்று டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட ஜஸ்பிரீத் சிங் இரண்டு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…