டேராடூன்-ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் உள்ள ஜகான் ஆற்றின் பாலத்தின் மற்றோரு பகுதி கனமழை காரணமாக இடிந்து விழுந்தது.
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை பெய்து வருவதால் பல இடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் நிரம்பி வருவதை கண்டு மக்கள் பீதியில் உள்ளனர். இந்நிலையில், இன்று பிற்பகல் ரிஷிகேஷ்-டேராடூன் சாலையில் ஜகான் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்தது.
அதே நேரத்தில், இந்த பாலத்தின் மற்றொரு தூண் சற்று நேரத்திற்கு முன் இடிந்தது. பாலம் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறிய சரக்கு வாகனங்கள் மற்றும் ஒரு கார் சிக்கியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒருவர் காயமடைந்தார். நீரின் வேகம் காரணமாக, ஜகான் ஆற்றின் பாலம் நடுவில் இருந்து உடைந்துவிட்டது. பாலம் உடைந்தபோது அவ்வழியாக சென்ற சில வாகனங்கள் கீழே விழுந்தன.
சில இருசக்கர வாகன ஓட்டிகளும் உயிர் தப்பினர். பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என கூறப்படுகிறது.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…