`மைக்ரோ RNA..’ மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.!
மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காகவும், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் அதன் பங்கிற்காகவும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி : 2024-ம் ஆண்டிற்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தில் நோபல் பேரவை, அமெரிக்காவை சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ருக்குன் ஆகியோருக்கு விருது அறிவித்திக்கிறது.
மைக்ரோ RNA-ஐ கண்டுபிடித்ததற்காகவும், மரபணு ஒழுங்குமுறையில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியதற்காகவும் அவர்கள் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைக்ரோஆர்என்ஏக்களுக்கு மனித மரபணு குறியீடுகள் என்று இப்போது அறியப்படுகிறது. அவர்களின் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு மரபணு ஒழுங்குமுறைக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.
உயிரினங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதற்கு மைக்ரோஆர்என்ஏக்கள் அடிப்படையில் எந்த அளவுக்கு முக்கியமானவை என்பதை நிரூபிக்கின்றன.
இந்த பரிசு 2023 ஆம் ஆண்டுக்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆராய்ச்சிக்காக கட்டலின் கரிகோ மற்றும் ட்ரூ வெய்ஸ்மேன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்கப்படும் நோபல் பரிசுகளில் இந்த மருத்துவப் பரிசு முதன்மையானது.