Categories: இந்தியா

#BREAKING: ஆந்திரா ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

Published by
murugan

கண்டகப்பள்ளி  ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.  இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தை எடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளான இடம் இருள் சூழ்ந்த காணப்படுகிறது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து தேவையான அளவு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பவும், ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்டுப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளை செய்யவும் முதல்வர் உத்தரவு ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார். கண்டகப்பள்ளியில் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணி ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த நான்கு மாதத்தில் ஆந்திராவில் தற்போது நிகழ்ந்த ரயில் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 உயர்ந்து சவரன் ரூ.65,000-ஐ நெருங்கியுள்ளது. கடந்த வாரத்தில் தங்கம்…

23 minutes ago

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: முடிவுக்கு வந்த மீட்பு நடவடிக்கை… அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக் கொலை!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

47 minutes ago

தனுஷ் கிட்ட கதை சொல்லிருக்கேன்! டிராகன் இயக்குநர் சொன்ன சீக்ரெட்!

சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த…

1 hour ago

ரோஹித் சர்மா எதுக்குங்க ஓய்வு பெற வேண்டும்? கடுப்பான ஏபி டிவில்லியர்ஸ்!

டெல்லி : கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா வெற்றியடைந்து கோப்பையை கைப்பற்றிய நிலையில், அந்த சந்தோசத்தோடு டி20…

2 hours ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் அப்டேட் முதல்..பாகிஸ்தான் ரயில் கடத்தல் வரை!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

2 hours ago

இந்தி பேசுறவங்களே தமிழ்நாட்டுக்கு தான் வேலை தேடி வாரங்க! திருமாவளவன் ஸ்பீச்!

சென்னை : தமிழகத்தில் மும்மொழி கொள்கை விவரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பலரும்…

3 hours ago