Categories: இந்தியா

ஆந்திரா ரயில் விபத்து.! பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு.!

Published by
மணிகண்டன்

நேற்று மாலை ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் ஹவுரா-சென்னை வழித்தடத்தில் விசாகப்பட்டினம் மற்றும் பலாசா இடையே இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை அடுத்து 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், 22 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

ரயில் சிக்னல் இல்லாததன் காரணமாக அலமண்டா மற்றும் கண்டகப்பள்ளி ரயிலானது தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது விசாகப்பட்டினம் – ராய்காட் பயணிகள் ரயில் பின்னால் இருந்து மோதியது. இந்த விபத்தில் 3 பெட்டிகள் தடம் புரண்டன.

ஆந்திரா ரயில் விபத்து: உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்!

இந்த விபத்தில் நேற்றுவரை 9 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், தற்போது  பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது என விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தெரிவித்துள்ளர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2.5 லட்சமும், சிறிய காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தொகை நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக 2 லட்சம் ரூபாய் வழங்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ஆந்திர மாநில அரசு சார்பிலும் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனித பிழையின் காரணமாக அதாவது ரயில்வே ஊழியர் தவறான சிக்னல் காணிபித்தோ. அல்லது ரயில் குறித்து சிக்னல் தேவிக்காத காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது இன்னும் உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

10 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

10 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

12 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

13 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

14 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

15 hours ago