ஆந்திர மாநில YSRC தலைவர் கொலை .., 3 போலீசார் காயம்..!

Default Image

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த துவாரகா பகுதியில் உள்ள ஜி கொத்தபள்ளி என்னும் கிராமத்தை சேர்ந்த யுவஜன ஸ்ராமிகா ரைத்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு அதே கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ தலாரி வெங்கட ராவ் என்பவர் தான் காரணம் என உள்ளூர் மக்கள் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சி உள்ளேயே ஏற்பட்ட போட்டி காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான பிரச்சினைகள் போலீசாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் எம்எல்ஏ தலாரி வெங்கட ராவை மக்களிடம் இருந்து காப்பாற்ற முயன்றறுள்ளனர். அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் மூன்று போலீசாரும் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

மக்களிடமிருந்து எம்எல்ஏவை பாதுகாப்பதற்காக ஒரு பள்ளியில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொத்தப்பள்ளி பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளதால், போலீஸ் சூப்பிரண்டு ராகுல் சர்மா மற்றும் துணை இன்ஸ்பெக்டர் பால ராஜூ ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்