ஆந்திராவில் புதிதாக 1,439 பேருக்கு கொரோனா..!

Default Image

ஆந்திரப்பிரதேசத்தில் இன்று கொரோனா வைரசால் 1,439 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரப்பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,439 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 26 ஆயிரத்து 042 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திரத்தில் இன்று மட்டும் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,964  ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,311 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 19 லட்சத்து 97 ஆயிரத்து 454 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் தற்போது கொரோனா வார்டு மற்றும் வீடுகளில் 14 ஆயிரத்து 624 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்