ஆந்திராவில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெல்லி சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம். அவர் தனது வீட்டின் அருகில் கோணிப்பை ஒன்று இருப்பதை பார்த்து, அதனுள் என்ன இருக்கிறது என்று கோணிப்பையை பிரித்து பார்த்த அவர் ஷாக்காகி உள்ளார். அந்த கோணிப்பையில் மனிதனின் தலை ஒன்று இருந்துள்ளது. அதனையடுத்து கோணிப்பையை யாராவது எடுக்க வருகிறார்களா என்று தனது வீட்டிலிருந்தப்படி கண்காணித்து வந்தார் சுப்ரமணியம்.
அப்போது அவரது வீட்டின் அருகிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து ராஜு என்ற இளைஞர் அந்த கோணிப்பையை எடுத்து செல்வதை பார்த்துள்ளார். சிறிது நேரங்களுக்கு பிறகு சுப்ரமணியம் கோணிப்பையை எடுத்து சென்ற ராஜுவின் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, ராஜு மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணும் சேர்ந்து அந்த மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக சுப்ரமணியம் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜு மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணை கைது செய்து கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ராஜுவின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, ராஜு சிறு சிறு சிறு திருட்டு வேலைகள் செய்து வருவதும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த மனிதனின் தலை மயானத்தில் இருந்து எடுத்து வரப்பட்டதா அல்லது யாரையாவது கொன்று கொண்டு வந்தார்களா..? என்கிற விதத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…