சந்திரபாபு வசிக்கும் வீட்டை இடிக்க ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அதிரடி உத்தரவு!

Default Image

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி ஏற்றத்தில் இருந்து முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மீது அடுத்தடுத்து தொடர்ந்து அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரையின் ஓரம்  முன்னாள் முதல்வருக்கு சொந்தமான  8 கோடி மதிப்பில் கட்டப்பட்டிருந்த “பிரஜா வேதிகா” இல்லம் இருக்கிறது. கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருந்த இல்லத்தை விதிமுறை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இடிக்க உத்தரவிட்டார். அதன் படி,கட்டிடமானது கடந்த வாரமானது நகராட்சி சார்பில் தூள் தூளாக  இடிக்கப்பட்டது.
இந்நிலையில், அதே கிருஷ்னா நதிக்கரையின் பகுதியில் தற்போது சந்திரபாபு வசித்து வரும் இல்லமும் விதிமுறை மீறி கட்டப்பட்டிருப்பதாக கூறி அதனை காலி செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளனர் . ஒரு வாரத்திற்குள் இல்லத்தை காலி செய்ய வேண்டும் என்றும் இல்லையென் எந்த அறிவிப்பும் இன்றி இடிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளனர் சந்திரபாபு வின் இல்லம் மட்டுமல்லாமல் கிருஷ்ணா நதிக்கரையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இருக்கும் அனைத்து வீடுகளையும் காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்..

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu
TNBudget2025 - budget
Free laptop for College students
tidel park TN
Tamil Nadu Budget 2025
TN Budget 2025 for students
TNBudget2025