ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை மக்களிடம் விரைவாக கண்டறிய வெளிநாடுகளில் இருந்து ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கிட்களை ஆர்டர் செய்திருந்தது. இதுவரை 3 லட்சம் ரேபிட் கிட்கள் சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ளன.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் இதுவரை 572 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 14 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு விரைவாக பரிசோதனை செய்வதற்காக தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் ஆந்திர மாநிலத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளன.
அதன் படி, வந்திறங்கிய ரேபிட் கிட் கருவி மூலம் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கொரோனா துரித பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவருக்கு கொரோனா இல்லை என முடிவு வெளியானது.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…