ஹெலிகாப்டரில் விசாகப்பட்டினம் புறப்பட்ட ஆந்திர முதல்வர்.!

Published by
பாலா கலியமூர்த்தி

விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக சாலையில் மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த ரசாயன தொழிற்சாலை சுற்றியுள்ள கிராமத்து மக்களை மீட்டு வருகின்றனர். 

இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அங்கு  விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு, கிங்சார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரிடம் நலம் விசாரிக்கவும், ஆய்வு நடத்தவும் உள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. மேலும், தற்போது விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க சொல்லி மாநில பேரிடர் குழுவிடம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago