ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் ராயசோட்டி புறநகர் பகுதியில், செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாக ஆந்திர எஸ்.பி. பாபுஜிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உப்பரபள்ளி பகுதியில் உள்ள கிருஷ்ணாரெட்டி ஏரி அருகே போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது செம்மரங்களை வெட்டி கடத்த தயார் நிலையில் வைத்திருந்த கும்பலை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கற்கள் மற்றும் கோடாரிகளை போலீசார் மீது தாக்குதல் வீசிவிட்டு தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, தமிழகத்தை சேர்ந்த 28 பேரை ஆந்திரப் போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்த வைத்திருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என ஆந்திரப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
source: dinasuvadu.com
டெல்லி : தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…
சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…
சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…