25 பள்ளிகள்.! 13 மாத வேலை.! 1 கோடி ரூபாய் சம்பளம்! சிக்கிய பலே ஆசிரியை.!

Published by
மணிகண்டன்

உத்திர பிரதேசத்தில் உள்ள மைன்பூரை சேர்ந்தவர் அனாமிகா சுக்லா. இவர்  தொடர்ந்து 13 மாதங்களாக 25 பள்ளிகளில் வேலை பார்த்து அதற்கு சம்பளமாக 1 கோடி ரூபாய் சம்பளமாக  பெற்றுள்ளது அதிகாரிகளின் சோதனையில் தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதமே இந்த மோசடி வேலை அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அறிவியல் டீச்சரான அனாமிகா சுக்லா பிப்ரவரிக்கு முன்னர் 13 மாதங்களாக 25 பள்ளிகளில் வேலைபார்த்து சம்பளம் பெற்றுள்ளார்.

இந்த விஷயமானது, கல்வி அதிகாரிகள் மாணவ் சம்படா அரசு இணைய பக்கத்தில் ஆசிரியர்களின் குறிப்பை பதிவேற்றும் போது, அனாமிகா சுக்லா ஆசிரியையின் தனி விபரங்கள் 25 பள்ளிகளில் வேலைபார்ப்பதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் அதிகாரிகளையே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

அனைத்து பள்ளிகளின் வருகை பதிவேடு, மற்ற விவரங்களில் இருந்து எப்படி அனாமிகா தப்பினார் என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து முழு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், தற்போது ஊரடங்கு காலத்தால் தள்ளிவைக்கப்பட்ட விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளதாக பள்ளி கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.  

Published by
மணிகண்டன்

Recent Posts

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

1 hour ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

2 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

3 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

4 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

5 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

6 hours ago