அனாமிகா சுக்லா வழக்கு! இன்று மற்றொரு ஆசிரியை கைது.!

Published by
murugan

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி அனாமிகா சுக்லா என்ற பெயரில் வேலைக்குச் சென்ற அனிதா தேவி என்ற பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் மெயின்புரியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை அனாமிகா சுக்லா என்பவருக்கு ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்ததாக கணக்கு காட்டப்பட்டு,  கடந்த 13 மாதங்களில் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இயங்கும் வித்யாலயா பள்ளியில் பணியாற்றியதாக அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

இது தொடரபான விசாரிக்க  மாநில தொடக்க கல்வி துறையின் கூடுதல் இயக்குநர் உத்தரவிட்டார். இந்த விசாரணையில், அனமிகா சுக்லா பெயரில் சான்றிதழ்களை கொண்டு வேலை செய்து வந்த பிரியா சிங் என்பவரை  போலீசார் கடந்த 6-ம் தேதி கைது செய்தனர்.

இந்நிலையில், கடந்த 10-ம் தேதி உண்மையான அனாமிகா சுக்லா கல்வி அதிகாரி முன் ஆஜராகி, தனது கல்வி சான்றிதழ்கள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளது என புகார் கொடுத்தார். அனாமிகா பெயரில் வேலை செய்பவர்கள் போலியானவர்கள். அனாமிகாவின் சான்றிதழ்களை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மோசடிக்கும், அனாமிகாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என கல்வி அதிகாரி பிரஜாபதி கூறினார். 

இதையடுத்து, இந்த வழக்கில் மெயின்புரியை சேர்ந்த அனிதா தேவி என்ற மற்றொரு பெண்ணை போலீசார் இன்று கைது செய்தனர். இவர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வேலையில் சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. அனிதா தேவி கடந்த ஒரு வருடமாக ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார். மேலும், அவரிடம்  போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர்.

Published by
murugan

Recent Posts

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

51 minutes ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

2 hours ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

2 hours ago

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

4 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

6 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

7 hours ago