Categories: இந்தியா

கெஜ்ரிவால் வெளியில் வரக்கூடாது என ஒரு கூட்டமே வேலை செய்கிறது.! மனைவி குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அந்த புகாரின் பெயரில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டஅரவிந்த் கெஜ்ரிவிலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஜாமின் வழங்கியது. அதன் பின்னர் அமலாக்கத்துறை உடனைடியாக உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் மீது இடைக்கால தடை வாங்கியது. பின்னர், நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் தடை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து , இன்று அதே மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ , அமலாக்கத்துறையை கைது செய்துள்ளது. மேலும், டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலிடம் 5 நாள் விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.’

இந்த நடவடிக்கைகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், எனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வரக்கூடாது என ஒரு அமைப்பே வேலை செய்து வருகிறது. இப்படியான செயல் தான் சர்வாதிகாரம் அல்லது அவசரநிலை என கூறப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.

முன்னதாக கெஜ்ரிவால் கைது குறித்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று தெரிந்து தான் பாஜக பீதியடைந்து சிபிஐயால் அவரை கைது செய்ய வைத்துள்ளது என குற்றம் சாட்டினர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

1 hour ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

1 hour ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

2 hours ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

3 hours ago

மலேசியாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து! 33 பேர் காயம்..மீட்பு பணி தீவிரம்!

மலேசியா :  தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…

3 hours ago

அச்சுறுத்தும் தெருநாய்க்கடி: “ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம்” – அன்புமணி

சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…

3 hours ago