பீகாரில் 11 முறை கொரோனா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்.
பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தின் ஓரய் எனும் கிராமத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 முதியவர் ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று முதல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, டிசம்பர் 30-ஆம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். 12-ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வந்த போது அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி செலுத்தி கொள்வது தனக்கு நல்ல பலனைத் தருவதாகவும், அதனால், தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதாகவும், ஒவ்வொரு முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதியை குறித்து வைத்திருப்பதாகவும், அரசு அற்புதமான தடுப்பூசி உற்பத்தி செய்து இருக்கிறது, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் எட்டு முறை தனது ஆதார் கார்டு, மொபைல் எண்ணை சமர்ப்பித்து தடுப்பு செலுத்தி கொண்டதாகும், மனைவியின் வாக்காளர் அடையாள அட்டை, அவருடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு மூன்று முறை பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முதியவரின் இந்த செயல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…