வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் மாற்றி செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் !

Published by
Rebekal

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் கிராமத்தில் தடுப்பூசிகளில் முதல் டோஸ் இரண்டாம் டோஸ் வெவ்வேறாக மாற்றி செலுத்தப்பட்டது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், மக்கள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் வழக்கப்படுத்திக் கொண்டாலும் அதற்கான தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் கிராம அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும் இரண்டாவது ரோஸ் கோவாக்சின் என மாற்றி மாற்றி செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட 20 பேருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இது உண்மையாக நடந்து இருந்தால் அது கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

3வது வெற்றியை பதிவு செய்த மும்பை.! ஐதராபாத் அணிக்கு 5வது தோல்வி..,

மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…

5 hours ago

ரன் அடிக்க திணறிய ஹைதராபாத்.! பவுலிங்கில் மிரட்டிய மும்பைக்கு இது தான் இலக்கு.!

மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…

7 hours ago

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

9 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

9 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

10 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

11 hours ago