பிளாஸ்மாவை தானம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ. 5,000 – கர்நாடக அரசு.!

Published by
Ragi

கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்தால், அவர்களுக்கு ரூ. 5,000 நன்கொடையாக வழங்கப்படும் என்று கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மருத்துவர்களும், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஆனால் பிளாஸ்மா சிகிச்சை என்ற முறை கொரோனாவை கட்டுப்படுத்தி நல்ல பலனை தருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதன் பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்தவரின் உடம்பில் இயல்பாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். மேலும், ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவிலும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள”ஆன்டிபாடி”எனும் நோய் எதிர்ப்பு சக்தியை பிரித்து எடுத்து கொரோனா பாதித்த நபருக்கு செலுத்தினால், கொரோனாவை குணப்படுத்த உதவும் என்று கூறப்படுகிறது.

பிளாஸ்மா தெராபி என்று அழைக்கப்படும் இந்த முறை கொரோனா பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் ஊக்கப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கர்நாடக மாநில சுகாதார துறை அமைச்சரான சுதாகர், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் தங்களின் பிளாஸ்மாவை தானம் செய்ய கோரியும், அவ்வாறு நன்கொடை அளிப்பவர்களுக்கு ரூ. 5000 ஊக்கத் தொகையாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago