Categories: இந்தியா

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. 18 மசோதாக்கள்! இன்று கூடுகிறது அனைத்துக்கட்சி கூட்டம்!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த செப்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது குறிப்பாக, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற மக்களவை, மாநிலங்களவைகளில் விவாதங்கள் நடந்தது.

அதன்பிறகு நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 15 அமர்வுகளாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோன்று, மொத்தம் 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அதி்ல 12 மசோதாக்களை நிறைவேற்றவும், 6 மசோதாக்களை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது. 18 மசோதாக்கள் உட்பட முக்கிய அலுவல்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!

இதில், குறிப்பாக இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

டிச.4ம் தேதி முதல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.  கூட்டத்தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதும் தேவை. அதுமட்டுமில்லாமல், அமைதியான சூழல் வேண்டும்.

இதனால் மழைக்கால தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஆதரவு கேட்டு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.  இதில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியின் எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.

Recent Posts

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

9 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

11 hours ago

சைலண்டாக 2 போன்களை அறிமுகம் செய்த ஜியோ! அம்பானி போட்ட பாக்க பிளான்?

இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…

12 hours ago

ரிக்கி பாண்டிங், சேவாக்கை கழட்டிவிட்ட டெல்லி! பயிற்சியாளராக களமிறங்கும் ஹேமங் பதானி!

டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…

12 hours ago

அசாமில் ரயில் தடம்புரண்டு விபத்து! சிலருக்கு காயமா? விளக்கம் கொடுத்த முதல்வர்!!

அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…

13 hours ago

“எதற்கும் தகுதியற்றவர்”…டொனால்ட் டிரம்ப்பை விமர்சித்த கமலா ஹரிஷ்!

அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…

14 hours ago