அகமதாபாத்தின் ஒரு நாள் கலெக்டராகிய 11 வயது சிறுமி – காரணம் இது தான்!

Published by
Rebekal

மூளைக்கட்டியால் பாதிக்கப்பட்ட அகமதாபாத்தை சேர்ந்த சிறுமி அவரது விருப்பம் போல ஒரு நாள் கலெக்டராக இருந்துள்ளார்.  

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி தான் புளோரா. கடந்த 7 மாதங்களாக மூளைக் கட்டியால் அவதிப்பட்டு வந்த சிறுமி நன்றாக படிக்கக்கூடிய சிறுமி என குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் இந்த சிறுமிக்கு கலெக்டர் ஆக வேண்டும் என ஆசை இருந்ததாக சிறுமி குறித்து மேக் எ விஷ் பவுண்டேஷன் அதிகாரிகள் கலெக்டரிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கலெக்டரின் அதிகாரப்பூர்வ வாகனத்தில் அகமதாபாத் கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி புளோரா, ஒரு நாள் முழுவதும் கலெக்டரின் நாற்காலியில் அமர்ந்து ஒரு நாள் கலெக்டராக அவரது விருப்பப்படி இருந்துள்ளார்.

இது குறித்து அகமதாபாத் கலெக்டர் கூறுகையில், சிறுமி புளோரா கலெக்டராக வேண்டும் என்பது அவரது விருப்பம் எனவும், அவரது விருப்பத்தை நிறைவேற்றி தருமாறு மேக் எ விஷ் அறக்கட்டளை தனக்கு தெரிவித்திருந்தது, அவர்களது கோரிக்கையை ஏற்று நான் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து அவரது ஆசையை நிறைவேற்றி உள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Recent Posts

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

18 minutes ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

2 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

2 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

3 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

4 hours ago