ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஹட்சன் பால் தொழிற்சாலையில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலையில், பைப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து அமோனியம் வாயு கசிந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 20 பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக தொழிற்சாலை துறை பொது மேலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருப்பதாகவும், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…