ஆந்திராவில் ஒரு தொழில்சாலையில் அமோனியா வாயு கசிவு.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தென் கொரிய நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையிலிருந்து, ‘ஸ்டைரீன்’ என்ற விஷவாயு கசிந்தது. தொழிலாளர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியில் ஈடுபட்டதால், விஷவாயு கசிவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை, விஷவாயு கசிந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை. அது காற்றில் கலந்து, 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய நிலையில், இதனால், ஐந்து கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்தில் பல பேர் உயிரிழந்தனர். மேலும் 1,000க்கும் அதிகமானோர் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து விஷவாயு கசிவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்த சோகம் மறைவதற்குள்ளாக,கர்னூல் மாவட்டத்தின் நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய். அக்ரோ நிறுவனத்தில்ஆலையில் இருந்து அம்மோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த எரிவாயு கசிவினால், அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாஸ் ராவ் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…
சென்னை : புஷ்பா திரைப்படம் மூலம் பான் இந்தியா அளவில் ஆக்ஷன் ஹீரோவாக தடம் பதித்த அல்லு அர்ஜூனுக்கு இன்று…
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…