அமிதாப்பச்சனின் குரலுடன் வரும் கொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை நீக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ராகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை, நீதியின் நலனுக்காக மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சன் அத்தகைய சேவைக்கு பொருத்தமானவர் அல்ல, அதற்காக அவர் பணம் வசூலிக்கிறார். ரிங்டோனில் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை பேசுவதற்கு இந்திய அரசு அமிதாப் பச்சனுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது. சில கொரோனா போர் வீரர்கள் தேசத்திற்கு பெரும் சேவையைச் செய்து வருகிறார்கள். சிலர் தங்கள் கடினமாக உழைத்து பெற்ற வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்துள்ளனர்.
மேலும், பிரபலமான கொரோனா தடுப்பு வீரர்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி தங்கள் சேவையை வழங்க இன்னும் தயாராக உள்ளனர். மூத்த நடிகருக்கு “சுத்தமான வரலாறு” இல்லை, ஒரு “சமூக சேவகர்” என்று தேசத்திற்கு சேவை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் ஏ.கே. துபே, பவன் குமார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…