அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது பங்களாக்களை சானிடைசரால் சுத்தம் செய்து, நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்துள்ளது.
பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகனான அபிஷேக் பச்சனுக்கு நேற்று இரவு
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு லேசான பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனவே தனிமை வார்டுக்கு அவர்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பல பிரபலங்களும், ரசிகர்களும் தொலைபேசி வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நலன் விசாரித்தும், அனைவரும் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
நானாவதி மருத்துவமனையின் டாக்டர் அப்துல் சமத் அன்சாரி கூறுகையில், அமிதாப் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வசதியாக இருப்பதாகவும், நன்றாக உணர்வதாகவும், இருவரும் நன்றாக தூங்கி, காலை உணவை சாப்பிட்டதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது பிரஹன் மும்பை மாநகராட்சியில்(பி. எம். சி) உள்ள அதிகாரிகள் சிலர் மும்பையில் உள்ள பச்சனின் பங்களாக்களான ஜனக், ஜல்சா மற்றும் பிரதிக்ஷா ஆகியவற்றை சானிடைசரை கொண்டு சுத்திகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களின் பங்களா இருக்கும் பகுதியை நோய் கட்டுபாட்டு பகுதியாக அறிவித்து பேனர் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…
சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…
மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…
மலேசியா : தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள புறநகர்ப் பகுதியான புத்ரா ஹைட்ஸில் (Putra Heights), செலங்கோர் மாநிலத்தில், பெட்ரோனாஸ்…
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த…