Categories: இந்தியா

இந்தியா – பாகிஸ்தான்.. இந்தியா – வங்கதேசம்.! 560 கிமீ வேலி.! அமித்ஷா பெருமிதம்.!

Published by
மணிகண்டன்

இந்திய எல்லை பாதுகாப்பு படையான Border  Security Force எனும் BSF அமைப்பு உருவாக்கப்பட்டு 59 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக்கில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பபை ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு அந்தநிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ பிரதமர் மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்காளதேசம் எல்லைகளில் சுமார் 560 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையேயேயான இடைவெளிகளை அமைத்துள்ளோம்.

அரசின் திட்டங்கள் எம்பிக்கள் போஸ்டர் ஓட்டுவதற்கு பயன்பட கூடாது.! பிரதமர் மோடி பேச்சு.!

இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையானது, 2,290 கிமீ தூரம் கொண்டது. அதே போல, இந்தியா-வங்காளதேச எல்லையானது 4,096 கிமீ நீளம் கொண்டது. நதி, மலை மற்றும் சதுப்பு நில காடுகளில் பாதுகாப்பு எல்லை வேலிகள் அமைப்பது மிகவும் கடினம். அதனை தவிர்த்து மற்ற இடங்களில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் ஒரு நாடு வளர்ச்சியடையாது, செழிமை இருக்காது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சந்திரயான் திட்டம், ஜி 20 உச்சிமாநாடு திட்டங்கள் மூலம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது..

எல்லைகளில் வேலி அமைப்பது மட்டும் நாட்டைப் பாதுகாக்காது என்று நான் நம்புகிறேன். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியை செய்வதற்கு துணிச்சலான BSF ஜவான் வீரர்கள் தேவை என்று அமித்ஷா கூறினார். மேலும், BSF போன்ற வீரர்கள் எல்லைகளை பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டதால் இது சாத்தியமானது. என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago
என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

4 hours ago
MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

5 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

7 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago