கடந்த 2-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ம் கட்ட தொடர் தொடங்கியதில் டெல்லியில் நடந்த மோதல் குறித்து விவாதிக்க அனுமதிக்கும் படி எதிர்கட்சியான காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
மக்களவையில் கடந்த 5-ம் தேதி டெல்லியில் மோதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சபாநாயகர் மேஜையில் இருந்த ஆவணங்களை எடுத்து வீசினர்.இதனால் காங்கிரஸ் எம்பி 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பின்னர் 6-ம் தேதி மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு பதாகைகளுடன் சென்று டெல்லி வன்முறை பற்றி விவாதிக்கவும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
இதனால் மக்களவை நண்பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை கூடியபோது ஹோலி பண்டிகை முடிந்த பிறகுதான் டெல்லி வன்முறை பற்றி விவாதிக்கப்படும் என மத்திய அரசு கூறியது.
இதனால் கடந்த 6 -ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக 4 நாட்கள் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.இந்நிலையில் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடியுள்ளது. டெல்லிவன்முறை தொடர்பாக மக்களவையில் இன்று மாலை 5;30 மணியளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…