இந்தியா-சீனா எல்லைபிரச்சனைக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் அரசு இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், முதல் உத்தரவில், எண்ணெய் நிறுவனங்களுக்கு (எல்.பி.ஜி) சிலிண்டர்களை இரண்டு மாதங்களுக்கு சேமித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டது.
மற்றொரு உத்தரவில், காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஐடிஐ கட்டிடங்கள் காலி செய்யப்பட வேண்டும். இவை மத்திய ஆயுதப் படையினர் தங்குவதற்காக ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளது.
நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டபோது எந்தவிதமான பற்றாக்குறையையும் ஏற்படக்கூடாது என்பதற்காக எண்ணெய் நிறுவனங்களை இரண்டு மாதங்களுக்கு இருப்பு வைக்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசு கேட்டுக் கொண்டது.
காஷ்மீரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதமும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த இரண்டு உத்தரவுகளும் காஷ்மீரில் உள்ள மக்கள் மத்தியில் பீதியையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளது.
லடாக் எல்லையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக இந்தியாவுக்கும், சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…