ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து..2 ராணுவ வீரர்கள் பரிதாபமாக பலி ..3 பேர் காயம்.!!

Ambulance accident

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின்  ரஜோரி மாவட்டத்தில் இன்று காலை ராணுவத்தின் ஆம்புலன்ஸ், பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  2 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் ராணுவ வீரரும் உயிரிழந்ததாக அவர்கள் தெரிவித்தனர். அவர்களது உடல்களை மீட்புக்குழுவினர் பள்ளத்தாக்கில் இருந்து மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.  விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் கிடைத்ததும் உடனடியாக நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் உள்ளூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்